Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் 4000 பேர் கைது – இடமில்லாமல் திணறும் சிறைகள் !

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (09:13 IST)
காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கிவதற்கு முன்பாக காஷ்மீர் வெளியுலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து படிப்படியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் படிப்படியாக தொலைபேசி இணைப்புகள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்றவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் காஷ்மிரில் 4000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடைத்து வைக்க சிறைகளில் போதிய இடமில்லாததால் அண்டை மாநிலங்களுக்கு அவர்களை அனுப்பி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரையும் பொது பாதுகாப்பு சட்டம் எனும் பிரிவின் கீழ் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு வருடங்கள் வரை விசாரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம். கடந்த சனிக்கிழமை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments