Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேகதாது அணை கட்டுவது உறுதி: கர்நாடக உள்துறை அமைச்சர்

மேகதாது அணை கட்டுவது உறுதி: கர்நாடக உள்துறை அமைச்சர்
, செவ்வாய், 3 நவம்பர் 2015 (07:55 IST)
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநிலத்தின்,  உள்துறை அமைச்சராக புதிதாக பதிவியேற்றுள்ள பரமேஸ்வர் கூறியுள்ளார்.


 

 
கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது.
 
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு தமிழம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயினும் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.
 
இது குறித்து, புதிதாக பதிவியேற்றுள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது பரமேஸ்வர் கூறியதாவது:-
 
கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.
 
இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 
அணைகட்டுவதற்கு, மாநில அரசு முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதற்கான ஆயத்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றது.
 
மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை நீர்ப்பாசனத்துறை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பரமேஸ்வர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil