Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுவனின் உயரம் 5 அடி 7 அங்குலம்

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2014 (15:53 IST)
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் 5 அடி 7 அங்குலம் உயரம் உள்ளதால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கரண் சிங் என்னும் சிறுவனுக்கு 5 வயதாகிறது. இவர அவர் வயதுள்ள சிறுவர்கள் போல இல்லாமல் இப்போதே  5 அடி 7 அங்குலம் உயரம் இருக்கிறார்.
 
பள்ளியில் கின்டர்கார்டன் சேர்ந்த போது கரணிடமிருந்து மற்ற சிறுவர்கள் விலகியே இருந்ததாக கூறும் அவரது தந்தை சில நாட்களில் கரணுடன் பிற சிறுவர்கள் நண்பர்களாகி விட்டதாக குறிப்பிட்டார்.
 
கரணின் 25 வயது தாய் ஷ்வேட்லனா சிங்கின் உயரம் 7 அடி 2 அங்குலம். 2012 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உயரமான பெண் என்னும் கின்னஸ் பட்டம் பெற்றிருந்த இவர் 2 ஆண்டுகளில் 4 அங்குலம் வரை இப்போதும் வளர்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments