Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவம், பொறியியல் படிப்புகள் தாய்மொழியில் கற்பிக்கப்படும்: முதலமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (14:47 IST)
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் ஹிந்தியில் கற்பிக்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது அறிவுக்கும், ஆங்கிலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இனி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை ஹிந்தியில் கற்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
ஏழை விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை பலருக்கு ஆங்கிலம் தெரியாத போது திறமையாளராக இருந்தும் மருத்துவம், பொறியியல் படிப்பு படிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் தாய் மொழியில் மருத்துவ கல்வி கற்பிக்கப்படுவது போல் மத்தியபிரதேசம் மாநிலத்திலும் தாய் மொழியில் தான் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு கற்பிக்கப்படும் என்ற முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு ஹிந்தியில் கற்பிக்கப்படும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம் தான் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments