Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு !

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (19:36 IST)
புதுச்சேரியில் கொரோன கால ஊரடங்கு மேலும்  30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கொரொனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில்  அங்கு கடந்த 7 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி  இன்று மேலும் சில தளர்களுடன் கூடிய  ஊரடங்கை  வர்ம் 30 ஆம் தேதி வரை அரசு அமல்படுத்தியுள்ளது.


இதில், ஏற்கனவே மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இதுமேலும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கடற்கரை சாலை, பூங்காக்களில் காலை 5 மணி முதல் காலை 9வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம் எனவும்,  திருமணம் நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்; இறுதிச் சடங்கில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.  அதேபோல் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளில் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


மேலும், இனிவரும் 5 நாட்களுக்குள் அங்குள்ள தொழிற்சாலைகள், மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களும், ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments