Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறவி மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மாயாவதி

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (21:11 IST)
பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா? என்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
“மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளும், பொதுமக்கள் நலன்களுக்கான ராஜதர்மத்தை கடைப்பிடிக்கவில்லை. எனவே, கூட்டணி கட்சிகளான குறிப்பாக, பஞ்சாப் அகாலி தளம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி உறவை மறுசிந்தனை செய்ய வேண்டும். இதைத்தான் மக்களும் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர்.
 
பாஜகவின் செயல்பாடுகளைப் பார்த்து கூட்டணி கட்சிகளும் கவலை அடைந்தாலும் கூட்டணி தர்மத்தை பின்பற்றி அமைதியாக இருக்கின்றனர். ஆனால், மக்கள் நலன் கருதி அவாகள் ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குறுகிய எண்ணம் கொண்ட பாஜக கட்சியின் செயல்பாடுகள் தொடரும்.” என்று கூறியுள்ளார்.
 
லலித் மோடி சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மாயாவதி, கறைபடிந்த மற்றும் ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

Show comments