Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஐடி மாணவர்களுடன் உரையாடுகிறார் பேஸ்புக் நிறுவனர்

ஐஐடி மாணவர்களுடன் உரையாடுகிறார் பேஸ்புக் நிறுவனர்
, திங்கள், 19 அக்டோபர் 2015 (19:28 IST)
வரும் 28 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்கு வரும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
 

 
இது குறித்து அவர் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா என்பது எங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமான தொரு இடமாகும். இந்தியாவில் 13 கோடிக்கும் அதிக மான மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
 
அந்த மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கிறேன். இதற்காக வரும் 28ஆம் தேதி புதுதில்லியில் உள்ள ஐஐடி. கல்வி நிறுவனத்துக்கு வருகிறேன். அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
 
அது மட்டுமல் லாமல் பேஸ்புக் பயன்படுத்துவோர் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். அவர்கள் என் வலைதளத்தில் அவர்களின் கேள்விகளை பதிவு செய்யலாம்" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil