Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலக்காடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு

பாலக்காடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு
, சனி, 17 அக்டோபர் 2015 (19:25 IST)
பாலக்காடு வனப்பகுதியில் போலீஸாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதில் மாவோயிஸ்ட்டுகள் காயமடைந்தனர்.


 

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடி பகுதியில் வனப்பகுதியில் போலீஸார் மதிய நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் திடீரென போலீஸார் வந்து கொண்டு இருந்த வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து, போலீஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் மாவோயிஸ்ட்டுகள் சிலர் படுகாயம் அடைந்து அங்கு இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இந்நிலையில் கேரளாவின் மாவோயிஸ்ட் ஒழிப்பு சிறப்புப் படையினர் சம்பவ நடந்த வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்ட்டுகள் சிகிச்சைக்காக கேரளாவின் நகருக்குள் வர வாய்ப்புள்ளதாக அம்மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கேரளா தமிழக எல்லை பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil