ராகுல் காந்தி தொகுதியில் யாரும் வாக்களிக்கக் கூடாது.. துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்ட்..!

Mahendran
புதன், 24 ஏப்ரல் 2024 (16:20 IST)
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் யாரும் வாக்களிக்க கூடாது என்று துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மாவோயிஸ்ட் மிரட்டி இருப்பதாக கூறப்படும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜா என்ற பெண்ணை வேட்பாளர் ஆக்கி உள்ளது என்பதும் தெரிந்தது. 
 
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது இந்தியா கூட்டணியின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும் வகையில் உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் வயநாடு தொகுதியில் உள்ள மலை கிராமத்தில் திடீரென மாவோயிஸ்டுகள் நான்கு பேர் துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியதாகவும் யாரும் வாக்களிக்க கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி நமது நன்மைக்காக எதுவும் செய்யவில்லை என்றும் எனவே தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என்று மாவோயிஸ்டுகள் மிரட்டியதாக வெளியாகி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments