Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி தொகுதியில் யாரும் வாக்களிக்கக் கூடாது.. துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்ட்..!

Mahendran
புதன், 24 ஏப்ரல் 2024 (16:20 IST)
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் யாரும் வாக்களிக்க கூடாது என்று துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மாவோயிஸ்ட் மிரட்டி இருப்பதாக கூறப்படும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜா என்ற பெண்ணை வேட்பாளர் ஆக்கி உள்ளது என்பதும் தெரிந்தது. 
 
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது இந்தியா கூட்டணியின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும் வகையில் உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் வயநாடு தொகுதியில் உள்ள மலை கிராமத்தில் திடீரென மாவோயிஸ்டுகள் நான்கு பேர் துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியதாகவும் யாரும் வாக்களிக்க கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி நமது நன்மைக்காக எதுவும் செய்யவில்லை என்றும் எனவே தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என்று மாவோயிஸ்டுகள் மிரட்டியதாக வெளியாகி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments