Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவில் பிரபல மாவோயிஸ்ட் தலைவர் கைது

ஆந்திராவில் பிரபல மாவோயிஸ்ட் தலைவர் கைது
, புதன், 14 அக்டோபர் 2015 (05:46 IST)
ஆந்திராடவில் சுமார் 50 பேரைக் கொலை செய்த பிரபல மாவோயிஸ்ட் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
 

 
இது குறித்து, கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் எம்.ரவி பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஆந்திரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 50 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், மேலும், 73 பயங்கர குற்றச் செயல்களிலும் பயங்கரவாதி சிவா ரெட்டி (எ) கிரண் ஈடுபட்டுள்ளார். கிரணால் இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு காவல் துறை ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த கிரண் ரெட்டியை கைது செய்துள்ளோம். மேலும், அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
 
இவரைப் பற்றி தகவல் தந்தால்,  ரூ. 20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது குற்றிப்பிடதக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil