Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியை தடுக்க எங்கள் கட்சியில் பல மல்யுத்த வீரர்கள் உள்ளனர் என அகிலேஷ் யாதவ் பேச்சு

மோடியை தடுக்க எங்கள் கட்சியில் பல மல்யுத்த வீரர்கள் உள்ளனர் என அகிலேஷ் யாதவ் பேச்சு
, ஞாயிறு, 4 மே 2014 (11:33 IST)
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், 56 இன்ச் மார்பளவுடைய மோடியை தடுக்க சமாஜ்வாதி கட்சியில் பல மல்யுத்த வீரர்கள் உள்ளனர் என்று பேசியுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தில் உள்ள கொரக்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தர பிரதேசத்தை குஜராத் போல மாற்ற (அவரையே குறிப்பிட்டு) 56 இன்ச் மார்பளவுடையவர் வேண்டுமென பேசியிருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்,' 56 இன்ச் மார்பளவுடைய மோடியை தடுக்க சமாஜ்வாதி கட்சியில் மல்யுத்த வீரர்கள் உள்ளனர். 
 
சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் உத்தரபிரதேசம் குஜராத்தை விட வளர்ச்சி அடைந்துள்ளது. 
 
குஜராத்தில் உத்தர பிரதேசத்தை போல நலத்திட்டங்கள் இல்லை. குஜராத்தில் வசதிகள் குறைவு. குஜராத் முன்மாதிரி என்று பொய்யான தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது எனப் பேசினார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil