Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடைபெறுகிறார் மன்மோகன் சிங் - ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்

Webdunia
சனி, 17 மே 2014 (12:59 IST)
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை மட்டும்  பெற்று வரலாறு காணாத தோல்வியை பெற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் இன்றுடன் விடைபெறுகிறார்.
 
மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கும் ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறினார். இதையடுத்து, அமைச்சரவை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் இறுதி கூட்டத்திற்கு மன்மோகன் சிங் தலைமை தாங்கினார்.அப்போது அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், 10 ஆன்டுகளாக தனக்கு ஒத்துழைப்பு அளித்த அமைச்சர்களுக்கு அவர் நன்றி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மன்மோகன் சிங் குடியரசுத் தலைவர் மாளிகை சென்று அங்கு பிரணாப் முகர்ஜியை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.
 
பாரதீய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments