Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை குண்டுவெடிப்பு - மன்மோகன் சிங் கடும் கண்டனம்

சென்னை குண்டுவெடிப்பு - மன்மோகன் சிங் கடும் கண்டனம்
, வியாழன், 1 மே 2014 (19:01 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் இளம் பெண் ஒருவர் பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர். 
 
காயம் அடைந்தவர்கள் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்பட்டுத்தியுள்ள நிலையில், குண்டுவெடிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் தெரிவித்த போது, அப்பாவி ஆண்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் கோழைத்தனமாக இத்தகையை தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். 
 
இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் நீதியின் முன் நிறுத்த தமிழக அரசிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் புரியுமென உறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil