Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் மகளை பொய் சொல்ல வைத்து விட்டனர் - மஞ்சு வாரியர் குற்றச்சாட்டு

என் மகளை பொய் சொல்ல வைத்து விட்டனர் - மஞ்சு வாரியர் குற்றச்சாட்டு
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (18:36 IST)
மலையாள நடிகர் திலீப்பும் (48) நடிகை காவ்யா மாதவனும் (32) இன்று கொச்சியில் திருமணம் செய்து கொண்டார்கள்.


 

 
திலீப் - காவ்யா ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்பு 1998ல் நடிகை மஞ்சு வாரியரைத் திருமணம் செய்த திலீப், 2015-ல் அவரை விவாகரத்து செய்தார். அதேபோல தொழிலதிபர் நிஸ்சால் சந்திராவை 2009ல் திருமணம் செய்த காவ்யா, அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார். 
 
திலீப்பும் காவ்யாவும் 21 படங்களில் ஒன்றாக நடித்தவர்கள். இவர்களுடைய திருமணம் குறித்து நீண்டநாளாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவருமே மறுத்து வந்தார்கள். இந்நிலையில் இன்று இருவரும் திடீர் என திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். 
 
திலீப்பிற்கும், மஞ்சு வாரியருக்கும் மீனாட்சி என்ற 16 வயது மகள் உண்டு. தன்னுடைய திருமணம் பற்றி கருத்து தெரிவித்த திலீப், தனது மகளுக்காகவே இந்த திருமணத்தை செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார்.

webdunia

 

 
இதை மறுத்த,  அவரின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் “திலீப், காவ்யா மதனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எங்கள் மகள் மீனாட்சி வற்புறுத்தினாள் என்று திலீப் கூறுவது சுத்த பொய். அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக, என் மகளை பொய் சொல்ல வைத்து விட்டார்கள். திலீப் எப்போது நடிப்பார் என்பதை கண்டு பிடிக்கவே முடியாது” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ் அப் வாத்தியாரை கைது செய்ய கோரிக்கை - கரூரில் பரபரப்பு