Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்கு செல்வதை தவிர்க்க பல்லியை விழுங்கிய நபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை..!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (17:08 IST)
சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக பல்லியை விழுங்கிய நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்பூர் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரால் புகாரின் அடிப்படையில் மகேஷ் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து போலீசார் தன்னை கைது செய்ய வருவார்கள் என்று பயந்த மகேஷ் சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக பல்லியை விழுங்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் உடல் நல குறைவு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சிறை செல்வதை தவிர்ப்பதற்காக பல்லியை விழுங்கிய நபர் உயிருக்கே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்