Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தோசை ஆறிவிடும் ‘என நச்சரித்த அம்மா –துப்பாக்கியை எடுத்து சுட்ட மகன்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (17:38 IST)
பீகார் மாநிலத்தில் ஆசையாக தோசை சுட்டு எடுத்துக்கொண்டு வந்து சாப்பிட சொன்ன அம்மாவை மகன் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் மஞ்சுதேவி. இவருக்கு 20 வயதில் யாதவ் என்ற மகன் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் மஞ்சுதேவி இரவு உணவாக தோசை சுட்டு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த தன் மகனிடம் சாப்பிட சொல்லி கொடுத்துள்ளார். ஆனால் போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த யாதவ் தோசையை வைத்துவிட்டு போக சொல்லியுள்ளார்.

ஆனால் மஞ்சுதேவியோ தோசை ஆறிக்கொண்டு இருக்கிறது என மீண்டும் மீண்டும் சொன்னதால் கோபமான யாதவ் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து மஞ்சுதேவியை சுட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் சேர்த்துள்ளனர். இப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிந்துள்ள போலீஸார் அவரிடம் இருந்த துப்பாக்கியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments