Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தோசை ஆறிவிடும் ‘என நச்சரித்த அம்மா –துப்பாக்கியை எடுத்து சுட்ட மகன்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (17:38 IST)
பீகார் மாநிலத்தில் ஆசையாக தோசை சுட்டு எடுத்துக்கொண்டு வந்து சாப்பிட சொன்ன அம்மாவை மகன் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் மஞ்சுதேவி. இவருக்கு 20 வயதில் யாதவ் என்ற மகன் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் மஞ்சுதேவி இரவு உணவாக தோசை சுட்டு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே இருந்த தன் மகனிடம் சாப்பிட சொல்லி கொடுத்துள்ளார். ஆனால் போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த யாதவ் தோசையை வைத்துவிட்டு போக சொல்லியுள்ளார்.

ஆனால் மஞ்சுதேவியோ தோசை ஆறிக்கொண்டு இருக்கிறது என மீண்டும் மீண்டும் சொன்னதால் கோபமான யாதவ் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து மஞ்சுதேவியை சுட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் சேர்த்துள்ளனர். இப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிந்துள்ள போலீஸார் அவரிடம் இருந்த துப்பாக்கியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments