Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீயிட்டுக்கொண்டு பகுஜன் சமாஜ் தலைவரை கட்டிப்பிடித்த வாலிபர்

தீயிட்டுக்கொண்டு பகுஜன் சமாஜ் தலைவரை கட்டிப்பிடித்த வாலிபர்
, செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (18:01 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் ஒருவர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு மேடையில் இருந்த அரசியல் பிரமுகரை கட்டிப்பிடித்ததால் இருவரும் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   
லக்னோவிலிருந்து சுமார் 160 கி.மீ தூரத்தில் இருக்கும் சுல்டான்பூரில்  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஒரு பூங்காவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 
 
மேடையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், மற்றொரு பக்கத்தில் பார்வையாளர்களும் அமர்ந்திருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள்  அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்த துர்கேஷ் குமார் சிங் என்னும் வாலிபர் மேடையின் மீது ஏறி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு மேடையில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரான காமருஸம்மா பௌஜியை  கட்டிப்பிடித்தக் கொண்டார். 
 

இச்சம்பவத்தால் இருவருக்கும் பலத்த தீ காயம் ஏற்பட்டது. தீக்குளித்த அந்த வாலிபருக்கு 95 சதவீத தீக்காயங்களும், பௌஜிக்கு 75 சதவீத தீக்காயங்களும் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற பிற அரசியல் கட்சிகளின்   பிரதிநிதிகளான ராம் குமார் சிங், சௌதிரி ஹ்ரிதே ராம் வர்மா போன்றவருக்கும் சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நபர் ஏன் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

Share this Story:

Follow Webdunia tamil