Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

Siva
திங்கள், 18 நவம்பர் 2024 (07:32 IST)
குஜராத் மாநிலத்தில் இறந்ததாக கருதப்பட்ட ஒருவரின் உடல் இறுதி சடங்கு செய்த மறுநாள் அவர் திடீரென உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயது பிரிஜேஷ் என்பவர் அக்டோபர் 27ஆம் தேதி காணாமல் போன நிலையில், அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது. இந்த நிலையில், காணாமல் போய் இரண்டு வாரங்கள் கழித்து சபர்மதி பாலம் அருகே அழுகிய நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை அடையாளம் காட்டிய குடும்பத்தினர், காணாமல் போன பிரிஜேஷ் உடல் தான் என்பதை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து, அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. ஆனால் இறுதி சடங்கு செய்த மறுநாள், பிரிஜேஷ் திடீரென வீட்டுக்கு வந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மன அழுத்தத்தில் இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தற்போது அவர் வீடு திரும்பி விட்டதாகவும், அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, புதைக்கப்பட்ட நபரின் உடல் யாஎ என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 100% வரி.. பொருளாதாரத்தை நசுக்குவோம்! - அமெரிக்கா எச்சரிக்கை!

கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.. கறார் வேண்டாம்.. சொத்து வரி குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்?

திருமண தகராறுகள் வழக்குகளில் உடனடி கைது நடவடிக்கை எடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

16 வயது மாணவனுக்கு பலமுறை பாலியல் பலாத்காரம்.. கைதான ஆசிரியைக்கு எளிதாக கிடைத்த ஜாமின்..!

ஆம்புலன்ஸ் இல்லாததால் வீட்டில் இரட்டை குழந்தைகள் பிரசவம்; ஒரு குழந்தை உயிரிழப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments