பெண் ஊழியரின் சேலையை இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி...

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (17:03 IST)
டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரின் சேலையை இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
டெல்லி ஏரோசிட்டியில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, அந்த ஹோட்டலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை தன்னுடைய அறைக்கு அழைத்த ஓட்டலின் பாதுகாப்பு பிரிவு மேனேஜர் பவான் தாகியா, அவரின் சேலையை பிடித்து இழுத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்போது அந்த அறையில் மற்றொரு நபரும் நின்று கொண்டிருக்கிறார். ஆனால், அதை தடுக்காமல் அந்த அறையிலுருந்து வெளியேறி விடுகிறார்.
 
இவை அனைத்தும் அந்த அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் அப்பெண் ஊழியர் புகார் அளித்தார். ஆனால், அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதோடு, புகார் கொடுத்த பெண்ணை வேலையை விட்டு நீக்கிவிட்டனர். 
 
இதையடுத்து, போலீசாரிடம் அப்பெண் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பவான் தாகியாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்