Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றில் பெண் குழந்தையா?.. தலாக் சொன்ன கணவன்

Arun Prasath
வியாழன், 14 நவம்பர் 2019 (19:32 IST)
மனைவி வயிற்றில் பெண் குழந்தை என தெரிந்த பின்பு கணவன் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த ஃபர்ஸானா என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கலிப் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது கர்பமாகியுள்ளதை தொடர்ந்து, தனது மனைவியை மருத்துவ பரிசோதனை செய்யுமாறு வற்புறுத்தினார்.

அதில் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்தது. இதனால் கோபமடைந்த கலிப், தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல் துறையில் புகார் அளித்தார் ஃபர்ஸ்னா. அப்புகாரின் அடிப்படையில் கலிப் மற்றும் அவரது தாயார் உட்பட அவரது குடும்பத்தினர் 10 பேரின் மீதும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments