Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குச்சாவடியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (15:45 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் வாக்குச்சாவடியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
நாடாளுமன்ற  தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் உத்தர பிரதேசத்தின் அயோன்லா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேவ்சரா ராம் பரோஸ் லால் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஹரி சிங் என்னும் 25 வயது இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். 
 
குடிபோதையில் இருந்ததாக கூறப்படும்  அவர் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,  அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  
 

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Show comments