Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போடுவதற்காக இரண்டு லட்சம் செலவு செய்த குடிமகன்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (19:59 IST)
தேர்தலில் ஓட்டு போடுவதற்கக சவுதி அரேபியாவிலிருந்து ரூ. 2 லட்சம் செலவு செய்து பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு வந்தவரைப் பற்றிய ஆச்சர்யமான தகவல் வெளியாகியிருக்கிறது.


 

 
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருபவர் முகம்மது அதிகுர் ரகுமான். இவர் பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் . 
 
இப்போது பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. நேற்று(அக்.12) சமஸ்திபூர் உள்ளிட்ட 49 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 
 
இந்த தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காகவே, முகம்மது அதிகுர் ரகுமான், சவுதி அரேபியாவில் இருந்து ரூ. 2 லட்சம் செலவு செய்து சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இது அந்த கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுபற்றி, முகம்மது அதிகுர் ரகுமான் கூறியபோது "பீகார் மாநிலத்தி்ல சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டேன். தேர்தலில் ஓட்ட போட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ரகுமான் கூறியுள்ளார்.
 
சொந்த ஊரில் இருந்து கொண்டே ஓட்டு போடாதவர்கள் மத்தியில் முகம்மது நிச்சயம் உயர்ந்தவராக கருதப்படக் கூடியவர்தான்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments