Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாலியாக இருக்கலாம் வாரியா என பல பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர் கைது!

ஜாலியாக இருக்கலாம் வாரியா என பல பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர் கைது!

ஜாலியாக இருக்கலாம் வாரியா என பல பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர் கைது!
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (13:49 IST)
ஆந்திராவில் பல பெண்களுக்கு போன் மூலமாக கால் செய்து ஆபாச வார்த்தைகளை கூறி ஜாலியாக இருக்கலாம் வாரியா என தொந்தரவு கொடுத்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
ஸ்ரீதர் என்பவர் நால்கொண்டா மாவட்டம், மட்டேபள்ளியை சேர்ந்தவர். இவர் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாச வார்த்தைகளை கூறி ஜாலியாக இருக்கலாம் வரமுடியுமா என அழைத்துள்ளார்.
 
இவரிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல தகவல்களை கூறினார். அதில், ஒரு பெண்ணுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிவிட்டு அந்த சிம்மை உடைத்து எரிந்த பின்னர் வேறு சிம்கார்டை போட்டு அதே பெண்ணுக்கோ, அல்லது வேறு பெண்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்துள்ளார்.
 
அதிகளவில் சிம்கார்டுகள் இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. பெண்களின் மொபைல் நம்பர்களை இணையதளத்திலிருந்து எடுத்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி பொதுமக்களை ஏமாற்ற முடியாது!