Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு ஆதார் அட்டை எடுத்த விநோத நபர் கைது

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (16:57 IST)
வீட்டில் உள்ள தனது நாய்க்கு இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை விண்ணப்பித்து பெற்றவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
மத்திய அரசு இந்திய குடிமகன் என்பதற்கும், சலுகைகள் பெறவும் ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் பொதுமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றது.
 

 
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் உம்ரியில் வசிக்கும் அசாம் கான் என்பவர் தனது வீட்டில் உள்ள நாய்க்கு ஆதார் அட்டை எடுத்து வைத்திருப்பதாக அங்குள்ள அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
 
இது குறித்து ஆய்வு செய்தபோது, டாமி சிங் என்ற பெயரில் நாயின் பெயரை குறிப்பிட்டும், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்டும் அந்த ஆதார் அட்டையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அசாம் கானை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், ஆதார் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!