Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஆளுனருடன் சந்திப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:35 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மிக அபாரமாக வெற்றி பெற்றது
 
200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் இன்றே ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்தாலும் மம்தா பானர்ஜி அவர்கள் போட்டியிட்ட தொகுதியான நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்று, அடுத்த 6 மாதத்திற்குள் வேறு ஏதாவது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments