Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடையாது, 42லும் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி அதிரடி..!

Mahendran
சனி, 24 பிப்ரவரி 2024 (09:12 IST)
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சுமூகமாக தொகுதியுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிட போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.  
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என்றும் காங்கிரஸ் உடன் தொகுதி உடன்பாடு இல்லை என்றும் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார் .
 
மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சோனியா காந்தி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடுத்த போராட்டம்: தேதி அறிவிப்பு..!

வெப்பநிலை இன்று அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கும்பமேளாவின் போது 1000 இந்துக்கள் காணாமல் போனார்கள். அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி தகவல்..!

பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடனே விடுவிப்பு.. இலங்கை கடற்படையின் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments