மம்தா பானர்ஜி தொகுதியில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (08:29 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மேற்குவங்க மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் என்ற தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதனையடுத்து அவர் ஆறு மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற நிலையில் தற்போது பவானிபூர் என்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொகுதியில் வேட்பாளராக மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். 
 
இந்த தொகுதியில் இடைத்தேர்தல் இன்று நடை பெறுவதை அடுத்து சற்று முன்னர் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என்பதும் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments