Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக.31ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமுடக்கம்: முதல்வர் தகவல்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (16:46 IST)
மேற்குவங்கம் மாநிலத்தில் ஆக.31ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
மேற்கு வங்க மாநிலத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இருப்பினும் ஆகஸ்ட் 31 வரை வாரத்தில் 2 நாட்கள் ஊரடங்கு அமல் என்று கூறியுள்ளார். இதனால் அம்மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். மேலும் ஆக. 1 பக்ரீத் தினத்தில் ஊரடங்கு இல்லை எனவும் அவர் அறிவிப்பு செய்துள்ளார்.
 
மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழகம் உள்பட பிற மாநிலங்களும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments