Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் மோத தயார்: மம்தா பானர்ஜி சவால்

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (18:15 IST)
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று அதே கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக மகளிர் பேரணி ஒன்றை முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திவருகிறார். தனது அரசின் கீழ் மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று விமர்சிக்கும் மோடிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச மாநில பெண்கள் நிலை குறித்து நரேந்திர மோடி பேசுவாரா? அது குறித்து பேச அவர் தயார் என்றால் நேருக்கு நேராக மோத நானும் தயார் என்று சவால் விடுத்துள்ளார்
 
மேற்கு வங்க பெண்கள் பாதுகாப்பாக இல்லை என விமர்சிக்கும் மோடியிடம், உத்திரப்பிரதேச பெண்களின் நிலை குறித்து பேசுவாரா? என மம்தா பானர்ஜி ஆவேசமாக சவால் விடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments