Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்த தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (20:56 IST)
மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10 ஆகிய நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 என இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் திடீரென மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற தடையால் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது பாஜக செய்த சதி என திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments