Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பந்த் கலாசாரத்தை தோற்கடிக்க வேண்டும் : மம்தா பானர்ஜி

பந்த் கலாசாரத்தை தோற்கடிக்க வேண்டும் : மம்தா பானர்ஜி
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (17:38 IST)
நேற்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் பற்றி கருத்து தெரிவித்த கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜி பந்த் கலாசாரத்தை தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நேற்று பந்த் நடத்தினர். தமிழ் நாட்டில் இந்த பந்த் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும், மேற்கு வங்காளத்தில் பெரிதும் எதிரொலித்தது. இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி இந்த பந்த் கலாசாரத்தை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்காளத்தை 34 ஆண்டுகளாக அழித்தவர்கள், இப்போது வளர்ச்சிப்பணிகளையும் அழிக்கிறார்கள்”என  இடதுசாரி கட்சிகளின் மீது குற்றம் சாட்டினார்.

மேலும், அவர்கள் கும்பகர்ணன் போன்றவர்கள். 6 மாதங்கள் தூங்கி விடுவார்கள். டி.வி. சேனல்களில் தோன்றுவதற்காக ஒரு நாள் விழித்தெழுவார்கள் என்றும் கூறினார். வன்முறையையும், பந்த் கலாசாரத்தையும் எங்கள் அரசு சகித்துக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil