Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சியா?? முதல்வரின் சர்ச்சை பேச்சு

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (08:41 IST)
இந்தியா ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கித் தான் செல்கிறது என மேற்கு வங்க முதல்வர் பரபரப்பாக பேசியுள்ளார்.

இந்தியாவில் பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையே உள்ளது. ஆனால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஜனாதிபதி ஆட்சி முறையே உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் ஜனாதிபதி ஆட்சியே இனி வரும் என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, நாம் ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம், இனி ஒரே தேர்தல், ஒரே அரசியல் கட்சி என்ற நிலை வரும் என கூறியுள்ளார்.

மேலும் பாஜகவை குறித்து, மத்திய அரசின் இனவாத அரசியல் என்னும் போதைக்கு பலரும் இரையாகி வருகிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அந்த போதைக்கு இரையாக மாட்டேன், அடிமையும் ஆகமாட்டேன் எனவும் ஆவேசமாக கூறியுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments