Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மம்தா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தீப்பிடித்ததால் பரபரப்பு

மம்தா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தீப்பிடித்ததால் பரபரப்பு
, வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (13:27 IST)
மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தெர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், மம்தா , அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
மால்டா மாவட்டத்தில் பிரசாரத்திற்கு சென்ற அவர், மால்டாவில் உள்ள கோல்டன் பார்க் என்னும் ஹோட்டலில் தங்கினார். 
 
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில், மம்தா தங்கி இருந்த அறையில் உள்ள குளிர் சாதனப்பெட்டி திடீரென தீப்பிடித்துக்கொண்டது. 
 
தீப்பிடித்தப்போது அறையில் இருந்த மம்தா, உதவிக்காக அழைக்க அங்கு சரியான நேரத்திற்கு வந்த உதவியாளர்கள் மம்தாவை அந்த அறையில் இருந்து வெளியேற்றினர். 
 
தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.  தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இச்சம்பவத்தை அடுத்து, மம்தா பானர்ஜிக்கு தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அவர் பத்திரமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil