Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் மோதி காயம்... மம்தா மீதான தாக்குதல் குறித்து அறிக்கை!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (10:43 IST)
மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மம்தா மீது நடந்த தாக்குதல் குறித்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். 

 
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த முறை பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று அவரை எதிர்த்து போட்டியிட நந்திகிராம் தொகுதியை தேர்வு செய்துள்ளார். 
 
இதனால் அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பரப்புரையை மேற்கொண்டார். பின்னர் தனது காருக்கு திரும்பும் நேரத்தில் காவலர்கள் பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதோடு முதுகிலும் அதிக வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகாரும் அளித்துள்ளார்.  
 
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். 
 
அதில், மம்தா பானர்ஜியின் காலில் கார் கதவு மோதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கார் கதவால் காயம் ஏற்பட்டது என்று கூறும் போது, மம்தா பானர்ஜியின் காலில் கதவு அறைந்ததற்கு என்ன காரணம் என்று அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments