Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான காவல்துறை ஆணையர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி

மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான காவல்துறை ஆணையர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி
, புதன், 13 ஏப்ரல் 2016 (09:32 IST)
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான கொல்கத்தா காவல்துறை ஆணையரை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


 
மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கொல்கத்தா நகர காவல்துறை ஆணையராக ராஜீவ்குமார் பதவி வகித்து வந்தார்.
 
இவர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர் என்றும், எதிர்க்கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்களை உளவு பார்ப்பவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது.
 
இதைத் தொடர்ந்து, புதிய காவல்துறை ஆணையராக சிஐடி பிரிவு கூடுதல் காவல்துறை டிஜிபி சவுமென் மித்ரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil