Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி பங்கு இல்லாமல் மத்தியில் புதிய அரசு சாத்தியமில்லை - மல்லிகார்ஜுன கார்கே

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (08:32 IST)
ராகுல்காந்தி இல்லாமல் மத்தியில் பாஜக அல்லாத புதிய அரசு சாத்தியமில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க ஒரு சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தேசிய அளவில் கோடிக்கணக்கான தொண்டர்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சி இல்லாமல் பாஜகவை எதிர்ப்பது விஷப்பரீட்சை என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே மோடி அரசு ஆர்எஸ்எஸ் நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து வருகிறது என்றும் இந்த அரசை அகற்றுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
 ராகுல் காந்தியின் பங்கு இல்லாமல் மத்தியில் பாஜக அல்லாத புதிய அரசு சாத்தியமில்லை என்றும் வரும் 2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்
 
மேலும் மற்ற மாநிலங்களுக்கு சென்று கட்சி தலைவர்களை சந்தித்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலில் தனது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments