ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

Senthil Velan
திங்கள், 27 மே 2024 (15:24 IST)
தோல்விக்கு பொறுப்பு ஏற்று, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
 
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40-ஐ கூட தாண்ட முடியாது என்றும் சமாஜ்வாதி கட்சி 4 இடங்களைத் தாண்டாது என்றும் தெரிவித்தார். 
 
அடுத்த 5 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார் என்று நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று அமித்ஷா கூறினார்.
 
ஜூன் 4ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியில்லை என குறை கூறுவார் என அவர் தெரிவித்தார். 

ALSO READ: தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?
 
தோல்விக்கு பொறுப்பு ஏற்று, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments