Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவர்! மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (14:07 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது

நாடு முழுவதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 10 மணி முதலாக வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது.

மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக நேரு குடும்பத்தை சாராத ஒருவர் பொறுப்பு ஏற்பது இதுவே முதல்முறை. பலரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments