Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவர்! மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (14:07 IST)
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது

நாடு முழுவதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று காலை 10 மணி முதலாக வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது.

மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக நேரு குடும்பத்தை சாராத ஒருவர் பொறுப்பு ஏற்பது இதுவே முதல்முறை. பலரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments