Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது என்னடா புதுசா இருக்கு! ஆண் பிபிஓ ஊழியர்கள் பலாத்காரமா!

இது என்னடா புதுசா இருக்கு! ஆண் பிபிஓ ஊழியர்கள் பலாத்காரமா!
, வியாழன், 8 அக்டோபர் 2015 (14:21 IST)
பெங்களூரில் கால் செண்டரில் பணிபுரியும் இரண்டு ஆண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
வழக்கமாக, பெண்கள்தான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவார்கள். இப்போது ஆண்களுக்கும் அந்த நிலைமை வந்திருக்கிறது. பெங்களூரின், மைக்கோ லேஅவுட் பகுதியில் இருக்கும், ஒரு கால் செண்டரில் வேலை செய்யும் இரு ஆண்கள், வேலை முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
 
அவர்களின் கார் அதிகால 3.30 மணியளவில்  ஒரு குறுகலான தெருவில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களின் காரை மறித்து ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து  இறங்கிய இரண்டு பேர், இவர்களின் காருக்குள் நுழைந்து, டிரைவரை நேராக அருகிலிருந்த ஏடிஎம்-க்கு போகச் சொல்லியிருக்கிறார்கள், ஏடிஎம்-ல், பிபிஓ ஊழியர்களை பணம் எடுத்துத் தர மிரட்டியுள்ளனர்.
 
ஆனால் அவர்களின் கணக்கில் பணம் இல்லை. இதனால் கோபமடைந்த அவர்கள் காரை ஜேபி நகரில் உள்ள ராகிகுட்டா பகுதிக்கு ஓட்டச் சொல்லியிருக்கிறார்கள். வாகனத்தை ஒரிடத்தில் நிறுத்துவிட்டு, கார் டிரைவரையும், பிபிஓ ஊழியர்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தியுள்ளனர். மேலும் அதில் ஒருவருடன் ஒரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
அதன்பின் அங்கிருந்து தப்பிவிட்டனர்.  பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில், சம்பந்தப்பட்ட இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. இயற்கக்கு மாறான ஒரினச் சேர்க்கைக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
 
இந்த சம்பவம் பெங்களூரில் உள்ள கால் செண்டர் ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil