Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சபர்ணாவை தொடர்ந்து மேலும் ஒரு நடிகை மர்ம மரணம்

சபர்ணாவை தொடர்ந்து மேலும் ஒரு நடிகை மர்ம மரணம்
, திங்கள், 14 நவம்பர் 2016 (12:25 IST)
சின்னத்திரை பிரபல நடிகை சபர்ணா கடந்த இரு தினக்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காத நிலையில் மற்றொரு நடிகை மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

பிரபல மலையாள நடிகை ரேகா மோகன். மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் படங்களில் நடித்துள்ள இவர், கேரளாவில் உள்ள திருச்சூரில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் மர்மான முறையில் அவரது வீட்டில் உயிரிழந்தார்.

வெளி நாட்டில் வசித்துவரும் அவரது கணவர் ரேகாவை தொடர்பு கொள்ள முயற்ச்சித்தும் தொலைபேசி எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த போலீஸார் ரேகாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், பிரேத அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று கூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணம் எடுக்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்: 10க்கும் மேற்பட்டோர் பரிதாபம்