Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் உபயோகிப்பதை கண்டித்த மேஜரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (17:07 IST)
ராணுவ வீரர் ஒருவர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்த மேஜரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்ப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராணுவத்தில் வீரர்களுக்கு பல காட்டுபாடுகள் உண்டு. அதுவும் பணியின் போது அவர்களுக்கென சில விதிமுறைகள் உண்டு. காஷ்மீரில் 8வது தேசிய துப்பாக்கி படை பிரிவு வீரர் ஒருவர் பணியின் போது செல்போன் பயன்படுத்தியுள்ளார். ராணுவ பிரிவின் மேஜர் ஷிகார் தபா அந்த வீரரை செல்போன் பயன்படுத்தக் கூடாது என பலமுறை எச்சரித்துள்ளார். 
 
ஆனால் அந்த ராணுவ வீரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து மேஜர் செல்பொனை அவரிடம் இருந்து பிடிங்கியுள்ளார். அதில் செல்போன் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் மேஜர் ஷிகர் தபாவுக்கும், அந்த ராணுவ வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ராணூவ வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேஜரை சுட்டார்.
 
காயமடைந்த மேஜர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments