எங்கள் ஊழியர் செய்த தவறை மன்னிச்சிடுங்க! – விவசாயியிடம் மன்னிப்பு கேட்ட மஹிந்திரா!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (08:52 IST)
கர்நாடகாவில் கார் வாங்க சென்ற விவசாயி ஒருவரை ஷோரூம் பணியாளர்கள் அவமதித்த விவகாரத்தில் மஹிந்திரா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்தியாவில் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் முக்கியமானது மஹிந்திரா நிறுவனம். இந்நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் ஷோரூம்கள் உள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள மஹிந்திரா ஷொரூம் ஒன்றிற்கு சென்ற விவசாயி மஹிந்திராவின் பொலேரோ கார் விலை குறித்து விசாரித்துள்ளார்.

அதற்கு அந்த ஷோரூம் விற்பனையாளர் “இந்த காரின் விலை பத்து லட்சம், உன்னிடம் 10 பைசா கூட இருக்காது” என அந்த விவசாயியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த விவசாயியும், அவரது நண்பர்களும் குற்றம் சாட்டிய நிலையில், ஊழியரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டதுடன், பொலேரோ கார் ஒன்றையும் விவசாயிக்கு டெலிவரி செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments