Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது மகாராஷ்டிரா மாநில அரசு: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 23 மே 2022 (07:00 IST)
பெட்ரோல் டீசலுக்கான வரிகளை ஏற்கனவே மூன்று மாநிலங்கள் குறைத்துள்ள நிலையில் தற்போது நான்காவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலமும் வரியை குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை 8 ரூபாயும் டீசல் விலை 6 ரூபாயும் குறைந்தது
 
மத்திய அரசை அடுத்து ராஜஸ்தான், கேரளா மற்றும் ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது என்பதும் இந்த மூன்று மாநிலங்களும் பாஜக இல்லாத கட்சிதான் ஆட்சி அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நான்காவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது. இந்த மாநிலத்திலும் பாஜக அல்லாத கட்சி தன் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து தமிழகமும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments