Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடக்கம்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பரபரப்பு!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:26 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சில வாரங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தினசரி பாதிப்புகள் 300க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது 400ஐ தாண்டியுள்ளது. இதனால் மும்பை மேயர் கிஷோரி பட்னேகர், மும்பையில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், விநாயகர் சதுர்த்தியை வீட்டிலிருந்தே கொண்டாடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல் இரண்டு அலைகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளான மகாராஷ்டிராவிலேயே மூன்றாவது அலையும் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments