Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடக்கம்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பரபரப்பு!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:26 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சில வாரங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தினசரி பாதிப்புகள் 300க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது 400ஐ தாண்டியுள்ளது. இதனால் மும்பை மேயர் கிஷோரி பட்னேகர், மும்பையில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், விநாயகர் சதுர்த்தியை வீட்டிலிருந்தே கொண்டாடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல் இரண்டு அலைகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளான மகாராஷ்டிராவிலேயே மூன்றாவது அலையும் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments