Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா-ஹரியானாவில் பா.ஜ.க. முன்னிலை: தனித்து ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (10:08 IST)
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கிறது.
 
காலை 10:00 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க. 112 இடங்களிலும், சிவசேனா 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க. தனித்து ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அக்கட்சியின் மாநில தலைவரான தேவேந்திர பட்னவிஸ் மற்றும் பங்கஜா முண்டே ஆகியோரிடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
 
அதே போல் ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜ.க. 48 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் 17 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், ஹரியானா ஜன்கிட் காங்கிரஸ் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. இங்கும் பா.ஜ.க. தனித்து ஆட்சியை பிடிக்கிறது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments