Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதங்களில் 400 பேர் பாலியல் வன்கொடுமை! – மகாராஷ்டிராவில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (13:21 IST)
மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 6 மாதத்திற்குள் 400 பேரால் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தாய் இல்லாத இவருக்கு இவரது தந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் அங்கு சிறுமியின் கணவர் மற்றும் மாமியார் துன்புறுத்தியதால் அவர் தனது தந்தையை தேடி வந்துள்ளார். ஆனால் தந்தையும் கைவிடவே பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் சிறுமியை பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரளிக்க சிறுமி காவல் நிலையம் சென்றபோதும் அவரது புகாரை ஏற்றுக் கொள்ளாததுடன் காவலர் ஒருவரே சிறுமியை வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் போலீஸார் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். தற்போது அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்