Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் எந்த தெரு பெயரிலும் சாதி இருக்க கூடாது! – மகாராஷ்டிரா அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (08:59 IST)
மகாராஷ்டிராவில் சாதி பெயர்களால் வழங்கப்படும் தெருக்களின் பெயரை மாற்றவும், புதிய பெயரை சூட்டவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் மக்கள் வாழும் பல தெருக்களுக்கு அந்த பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை மக்களின் சாதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவற்றை நீக்கி தெருக்களுக்கு புதிய பெயர் சூட்ட உத்தரவு வெளியாகியுள்ளது.

அதன்படி மராட்டியத்தில் உள்ள மகர் வாடா, பவுத் வாடா, தோர் வாஸ்தி, பிராமன் வாடா, மாலி கல்லி ஆகிய பகுதிகளின் பெயர்களை நீக்கி அதற்கு பதிலான சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர் என பெயரிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள மராட்டிய அமைச்சர் அஸ்லாம் ஷேக் “ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மக்களை பிரித்தாழ்வதற்காக இதுபோன்ற சாதிய பெயர்கள் வைக்கப்பட்டன. அதனால் அவற்றை நீக்கி அதற்கு பதிலாக தேச தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்கள் பெயர் சூட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இது மக்களிடையையே சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments