Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சை பெற்ற பாட்டி; கழிவறையில் பிணமாக கண்டெடுப்பு! – மருத்துவமனையின் அலட்சியம்!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (08:48 IST)
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி 8 நாட்கள் கழித்து கழிவறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த ஹர்ஷல் என்பவர் தனது பாட்டிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென மூதாட்டி மயமாகியுள்ளார். 8 நாட்களாக அவரை மருத்துவமனையில் காணவில்லை. இந்நிலையில் மருத்துவமனை கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் வந்ததையடுத்து திறந்து பார்த்தபோது அங்கு ஹர்ஷலின் பாட்டி அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். எட்டு நாட்களுக்கு முன்னரே அவர் இறந்தும் கழிவறையை சுத்தம் செய்ய கூட யாரும் திறக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையை சுகாதாரமாக வைத்தில்லாமல் இருந்ததோடு, நோயாளிகளையும் முறையாக பராமரிக்க தவறியதற்காக அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் ஐந்து பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments