Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவி மாயம்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2016 (22:06 IST)
சென்னை ஐஐடியில் எம்.எஸ் படித்து வந்த ஆந்திர மாணவி காணாமல் போன சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ஆந்திர மாநிலம், குண்டூர் நகரத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். அவரது மகள் பிரதியுஷா.  இவர் சென்னை ஐ.ஐ.டி விடுதியில் தங்கி எம்.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதனையடுத்து, அவரது அறைக்குள் போலீசார் சோதனை செய்த போது, ஒரு கடிதம் இருந்தது. அதில், ஆன்மிக சேவைக்காக இமயமலை செல்கிறேன். எனவே, என்னை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
 
உண்மையிலேயே அவர் இமயமலை சென்றாரா அல்லது காதல் விவகாரத்தில் சிக்கி இது போல் விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்கிறாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments