Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவி மாயம்

சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவி மாயம்
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (22:06 IST)
சென்னை ஐஐடியில் எம்.எஸ் படித்து வந்த ஆந்திர மாணவி காணாமல் போன சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ஆந்திர மாநிலம், குண்டூர் நகரத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். அவரது மகள் பிரதியுஷா.  இவர் சென்னை ஐ.ஐ.டி விடுதியில் தங்கி எம்.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதனையடுத்து, அவரது அறைக்குள் போலீசார் சோதனை செய்த போது, ஒரு கடிதம் இருந்தது. அதில், ஆன்மிக சேவைக்காக இமயமலை செல்கிறேன். எனவே, என்னை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
 
உண்மையிலேயே அவர் இமயமலை சென்றாரா அல்லது காதல் விவகாரத்தில் சிக்கி இது போல் விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்கிறாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil